பிகிலுக்கு 50 கோடி.. மாஸ்டருக்கு 80 கோடி.! 'இத்தோடு முடிச்சிக்கலாமா..?" - பிரபல ஹீரோயின் அதிரடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் சம்பளம் மற்றும் வருமான வரித்துறை ரெய்டு குறித்து நடிகை குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் சம்பளம் குறித்து பிரபல நடிகை கருத்து | rajini's annaatthe actress khushboo opens over vijay's salary and income tax raids.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே மாஸ்டர் படப்பிடிப்பின் போது பிகில் படத்தில் வரி எய்ப்பு நடந்ததாக கூறி, விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் விஜய் வீட்டில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக செய்திகள் வந்தது. இது ரெய்டு இல்லையென்றும், முன்பு பிறப்பித்திருந்த தடை ஆர்டரை கேன்சல் செய்யவே வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த பதிவில் அவர் கூறியதாவது, ''விசாரணை முடிந்தது. நடிகர் விஜய்யின் சம்பள விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டது. பிகில் படத்திற்கு 50 கோடி. மாஸ்டர் படத்திற்கு 80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார். இப்போது இந்த கேஸை முடித்து கொள்ளலாமா.?" என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor