"யாரும் என் வீட்டுக்கு வரவேண்டாம்" - கொரோனா அச்சத்தால் பாலிவுட் சூப்பர்ஸ்டார் 'பகீர்' பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோன அச்சத்தில் இருக்கிறது. பலர் கொரோனாவால் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளள்து. மேலும் திரைத்துறையினரும் வரும் மார்ச் 31 தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர். சினிமா துறை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் கொரோனாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து  வருகின்றனர். 

கொரோனா பயத்தால் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இட்ட பதிவு Popular Hindi Superstar Actor Asks No On To Come To His

இந்நிலையில் நடிகரும் ஹிந்தி சினிமாவின் சூப்பர்ஸ்டாருமான நாடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் " யாரும் இன்று என் வீட்டிற்கு வர வேண்டாம். நான் வர போவதில்லை. எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.  

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மும்பையில் உள்ள தனது பங்களாவான ஜல்சாவின் வாசலில் வந்து நின்று ரசிகர்களை பார்த்து பேசுவார். அவரை பார்ப்பதற்காக வாரம் தோறும் ரசிகர்கள் அங்கு கூடுவார்கள்.

 

Entertainment sub editor