CORONA : பிரபல நடிகை அதிரடி... இனி நெருக்கமான சீன்களில் நடிப்பதை தவிர்க்க போகிறேன்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு ஷுட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழில் சசிகுமாருடன் பிரம்மா, மாயவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார்.

கொரோனா பயம் பிரபல நடிகை அதிரடி முடிவு Popular actress says she will try to avoid intimate scenes in movies

இவர் பிரபல டெக்கன் கிரானிக்கல் நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் "பயங்கள் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஷுட்டின் தளங்களில் பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். என்னையும் என்னுடன் வேலை செய்பவர்களையும்  பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னால் என்ன முடியுமோ அதை செய்வேன். கொரோனாவுக்கு பிறகு  ஷூட்டிங் என்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாகவே இருக்கப்போகிறது. அரசாங்கம் அளித்திருக்கும்  அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவர் " இனி முடிந்தவரை நெருக்கமான காட்சிகளை தவிர்க்க போகிறேன்" என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா பயம் பிரபல நடிகை அதிரடி முடிவு Popular actress says she will try to avoid intimate scenes in movies

People looking for online information on Corona, Covid19, Lavanya Tripathi will find this news story useful.