''அனிதாவை ரொம்ப பயந்து ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன்..'' - அனிதா சம்பத்தின் கணவர் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்தின் கணவர் உருக்கமான ஒரு வேண்டுகோளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அனிதா சம்பத்தின் கணவர் உருக்கமான வேண்டுகோள் | news anchor anitha sampath's husband request over coronavirus issue

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருப்பவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பில் இவரது தமிழ் உச்சரிப்பிற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. மேலும்  இவர் சூர்யா நடித்த காப்பான் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இவர் தற்போது எமர்ஜென்சி என்கிற வெப் சீரிஸில் டாக்டராக நடித்துள்ளார். 

இதனிடையே அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அனிதா சம்பத் செய்தி வாசிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ஃபர்ஸ்ட் டைம் அனிதாவை ரொம்ப பயந்து ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன், மக்களே உங்களுக்காக வெளியே நிறைய பேர் ரிஸ்க் எடுத்து வேலை பண்ணிட்டு இருக்காங்க, நீங்க வீட்டுக்குள்ள இருக்குறது மட்டும்தான் அவங்களுக்கு செய்யுற கைமாறாக  இருக்கும்'' என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Entertainment sub editor