சாப்பாடு இல்லாமல் தவித்து நின்ற மலைவாழ் மக்கள் - தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ச்சி சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேனி மாவட்டத்தில் தனுஷ் ரசிகர்கள் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலைவாழ் மக்களுக்கு தனுஷ் ரசிகர்கள் உதவி | dhanush fans in theni helps tribal peoples

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பல இடங்களில் மக்கள் போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைவாழ் மக்கள் உணவு இன்றி தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் போதிய வருமானம் இல்லாமல், வெறும் தண்ணீர் குடித்து உயிர் வாழ வேண்டியுள்ளது என கலங்கினார். 

இதை தொலைக்காட்சியில் பார்த்த தேனி மாவட்டம் தனுஷ் ரசிகர்கள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர். அங்கு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் அவர்கள் கொடுத்துள்ளனர். இதையடுத்து மலைவாழ் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் அதை வாங்கி சென்றனர். சரியான நேரத்தில் தனுஷ் ரசிகர்கள் செய்த இந்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Entertainment sub editor