www.garudabazaar.com

BB6 Tamil : அசல் கோலாரை பாத்து ஆயிஷா சொன்ன வார்த்தை??.. 2வது நாளுலேயே கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாங்க!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

Also Read | Bigg Boss 6 Tamil: கொட்டுற மழையில் குத்தாட்டம் போட்ட GP முத்து.. குதூகலமான பிக்பாஸ் வீடு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

இன்னொரு பக்கம் ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்தது முதலே தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆர்மி வரை உருவாக்கி ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குள் பிக்பாஸ் சார்பில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் சுவாரஸ்யம் நிகழ்ந்த வகையில் உள்ளது. இதனிடையே, ஆயிஷா மற்றும் அசல் கோலார் இடையே நடந்தது தொடர்பான செய்தி, தற்போது அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஒரு நாளுக்குள்ளேயே அசல் கோலாரை "வாடா, போடா" என நட்பு ரீதியாக ஆயிஷா பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், என்னை வாடா போடா என கூப்பிட வேண்டாம் என ஆயிஷாவின் முகத்திற்கு நேராக அசல் கோலார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், உடனடியாக தனியாக அமர்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்துள்ளார் ஆயிஷா.

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

தொடர்ந்து, அவர் அருகே சென்று அவரை தேற்றிய அசீம், ஒரு நாளில் எப்படி வாடா போடா என கூப்பிடலாம் என்று தான் அவன் டென்ஷன் ஆகி இருப்பான் என்றும், சின்ன பையன் என்பதால் வரும் நாட்களில் உன்னை பற்றி புரிந்து கொள்வான் என்றும் ஆறுதல் கூறினார். இதன் பின்னர், அசல் கோலார் அருகே அசீம் செல்ல ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், ஆயிஷாவுடன் நல்ல ஃப்ரண்ட் ஆக வேண்டும் என்றும் அசல் கோலார் கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பே வாடா, போடா என அழைத்தது தான் சரியாகவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

இதனைத் தொடர்ந்து, ஆயிஷா அருகே சென்ற அசல் கோலார், ஏன் தனியாக இருக்கிறீர்கள் என ஜாலியாக கேட்கிறார். இதனைத் தொடர்ந்து, தனது நண்பர்கள் மத்தியில் இப்படி பேசி பழகியதாகவும் அதே போல தான் அசல் கோலாரிடமும் பேசியதாக ஆயிஷா விளக்கம் அளிக்கிறார். தன்னிடம் மாற்றிக் கொள்ள நிறைய விஷயம் உள்ளது என்றும் அதனை இங்கே செய்வேன் என்றும் ஆயிஷா குறிப்பிடுகிறார்.

வந்த இரண்டு நாட்களிலேயே ஆயிஷா கண்ணீர் விட்ட விஷயமும், அதற்கான காரணமும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "யாருலே தூங்கும்போது காலை பிடிச்சு இழுக்குறது".. GP முத்துவிற்கு பயம் காட்டிய ராபர்ட் மாஸ்டர்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 tamil ayesha start to cry after asal kolaar response

People looking for online information on Ayesha, Bigg Boss season 6 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay Television will find this news story useful.