Bigg Boss 3-‘இதுக்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா...?’ - மெகா சீரியல் கணக்கா போகும் கவினின் காதல் கதை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3-ல் காதல் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக உருவெடுத்துள்ளது.

Bigg Boss Tamil 3,Kavin, Losliya, Sakshi, Love breakup, Hotstar

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் காதலும், அதனால் வெடிக்கும் பிரச்சனைகளும் கூடுதலாக இருக்கிறது. இந்த சீசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் முக்கிய விவகாரமாக இருப்பது சாக்ஷி-கவின்-லொஸ்லியா-வின் முக்கோண காதல் கதை தான். இந்த வாரம் லக்ஸுரி டாஸ்க் பட்ஜெட்டை தொடர்ந்து மொட்ட கடிதாசி டாஸ்க்கில் போட்டியாளர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தினர்.

கடந்த சில வாரங்களாகவே சாக்ஷி-கவின்-லொஸ்லியா தொடர்பான விவகாரம் தீராத பிரச்சனையக இருக்கும் நிலையில், ஹவுஸ்மேட்ஸ் இதனை தீர்க்கும் விதமகா கேள்விகளை மொட்ட கடிதாசியில் முடிந்து வைத்தனர். கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய மூவருக்கும் இடையில் கடுமையான ஆர்கியூமெண்ட் நடந்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்ல, சாக்ஷிக்கு இருக்கும் அதே ஃபீலிங்க்ஸ் லொஸ்லியா, கவின் ஆகியோருக்கும் இருக்கிறது என்பது 39ம் நாள் எபிசோடில் வெளிப்பட்டது.

கவின் மீது சாக்ஷி வைத்திருந்த காதல் முறிந்த பிறகு எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் லொஸ்லியாவின் கைகளை பிடித்து மணிக்கணக்கில் கதைப்பது சாக்ஷிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதேபோல், சாக்ஷி தன்னிடம் ஒன்று பேசிவிட்டு, தவறுகளை மன்னித்துவிட்டு, அதனை மன்னிக்காதவர் போல் பிறரிடம் சென்று பேசுவதை விரும்பாத கவின், சாக்ஷியிடம் Friendship கூட வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

கவினை எனக்கு பிடிக்கும், நான் பேசுவேன். அவன் மீது சாக்ஷி காதல் உணர்ச்சியில் இருப்பது தனக்கு தெரியாது. நன்றாக இருந்த காதல் ஜோடிக்குள் பிரிவை ஏற்படுத்திவிட்ட குற்ற உணர்வில் லொஸ்லியா என ஒவ்வொருவரும் தங்களது ஃபீலிங்க்ஸை வெளிப்படுத்தினர்.

இவர்களது பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க, என்ன டா இது வேற பிரச்சனையே இல்லாமல் ஓட்டிய கதையையே ஓட்டுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் தோன்றியுள்ளது. இந்த வார இறுதியில் இந்த முக்கோண காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கபப்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.