"சாணியையும்.. சந்தனத்தையும்..!" - சரவணின் பாலியல் கருத்துக்கு பிரபல இயக்குநர் கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பெண்கள் மீது உரசுவதற்காக பேருந்தில் பயணித்ததாக சரவணன் கூறியதற்கு பிரபல இயக்குநர் மனோபாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Tamil 3 Manobala about Saravanan molest comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது மீரா சுமத்திய பொய்யான குற்றம்சாட்டு குறித்து பேசுகையில், பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண்கள் உரசுவதை ஒப்பிட்டு கமல்ஹாசன் பேசினார். அப்போது குறுக்கிட்ட போட்டியாளர் சரவணன், தன் கையை உயர்த்தி தானும் தனது கல்லூரி நாட்களில் அத்தகைய செயலை செய்திருப்பதாக கூறினார். சரவணின் இந்த கருத்தை அங்கிருந்து பார்வையாளர்கள் உட்பட அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை பகிரங்கமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சரவணனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்நிலையில், இது குறித்து Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குநர் மனோபாலா, ‘உண்மையிலேயே பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றிருந்தாலும், அதை இப்படியா பப்ளிக்காக சொல்வது? மக்களிடம் எப்படி மரியாதை இருக்கும்? எது வேணாலும் தாறுமாறாக பேசலாமா?’.

‘பின்னர் மன்னிப்பு கேட்டதாக சொன்னாங்க.. இது சாணியையும் வீசுவாராம்.. சந்தனத்தையும் பூசுவாராம்.. என்ற மாதிரி உள்ளது. ஆமா, பெண்களை உரச தான் பஸ்ஸில் ஏறினேன்னு சொல்லிட்டு போக வேண்டியதான, அதற்கு தைரியம் இல்லைன்னா எதுக்கு பொதுவுல சொல்லணும்’ என சரமாரி கேள்விகளை முன்வைத்திருந்தார்.

‘பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் வாய்ப்பு கிடைக்கும், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் செல்கின்றனர். ஆனால், கடந்த சீசனில் டைட்டில் வின்னரான நடிகை இப்போது எங்கு இருக்கிறார்? என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியுமா?’ எனவும் மனோபாலா கேள்வி எழுப்பியிருந்தார்.

"சாணியையும்.. சந்தனத்தையும்..!" - சரவணின் பாலியல் கருத்துக்கு பிரபல இயக்குநர் கண்டனம் வீடியோ