www.garudabazaar.com

"என்ன, வெண்பா முகம் சிவந்துருக்கு.." கடுப்பை காட்டிய பாரதி.. இனி என்ன மேடம் பண்ண போறீங்க??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியது போலவே தெரிகிறது.

barathi angry towards venba and her mother reacted

ஒரு பக்கம் லட்சுமிக்கு தந்தை பாரதி குறித்து அனைத்து உண்மைகளும் தெரிய வர, இன்னொரு பக்கம், தாய் கண்ணம்மாவை மீண்டும் பாரதியுடன் சேர்த்து வைக்கும் முயற்சிகளிலும் லட்சுமி இறங்கி வந்தார்.

அதே போல, தன்னுடைய தாய் பற்றி எதுவும் தெரியாத ஹேமா கூட, பாரதியுடன் இணைந்து வாழும் படி, கண்ணம்மாவை அறிவுறுத்தி இருந்தார்.

அடுத்தடுத்து ட்விஸ்ட்

மேலும், பாரதி கண்ணம்மா தொடர் செல்வதை பார்க்கும் போது, விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் இணைந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அந்த வகையில், சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா தொடரில், திடீரென அடுத்தடுத்து சில ட்விஸ்ட்களும் அரங்கேறாமல் இல்லை.

சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த வெண்பாவின் தாய்

90'ஸ் காலத்தில் பிரபல சீரியல் நடிகராக இருந்த பரத் கல்யாண், விக்ரம் என்னும் கதாபாத்திரத்தில், பாரதியின் பெற்றோர்களான வேணு மற்றும் சவுந்தர்யாவின் கல்லூரி தோழராக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். இது ஒருபுறம் இருக்க, வெண்பாவுக்கும் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வர, அதிர்ச்சியில் உறைந்தே போகிறார் அவர். ரசிகர்களும் அந்த மர்ம நபர் யார் என்பதை அறிய வேண்டி காத்துக் கொண்டிருக்க, இறுதியில், பிரபல நடிகை ரேகா என்ட்ரி கொடுக்கிறார். அவர் தான் வெளிநாட்டில் இருக்கும் வெண்பாவின் தாய் என்பதும் தெரிய வருகிறது.

தொடர்ந்து, வெண்பாவை பார்க்க வரும் அவர், பாரதியுடன் மகளின் திருமணத்தை முடித்து வைக்க வந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு வந்த பிறகு தான், பாரதிக்கு வெண்பா மீது காதல் இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. அதே போல, வெண்பாவுடன் திருமணம் என ரேகா பேசியதைக் கேட்டதும் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார் பாரதி.

அதுல இருந்து வெளிய வா..

இது பற்றி, வெண்பாவை தனியாக அழைத்து பேசும் பாரதி, "என்னைக்காச்சும், நான் உன்ன காதலி, என் கேர்ள் ஃபிரெண்ட் இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லி இருக்கேனா?. இல்ல உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி இருக்கேனா?. முதல்ல இந்த Hallucination'ல இருந்து வெளியே வா" என கோபத்தில் கொப்பளிக்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டே இருக்கும் வெண்பா, பல்லைக் கடித்த படி, ஆத்திரத்தில் நிற்கிறார்.

பாரதி'ய மறந்துரு..

தொடர்ந்து, வெண்பாவின் தாயாரும், "பாரதி இனி உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார். நான் சொல்லும் நபரை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டில் ஆகும் வழியை பார்" என அறிவுறுத்துகிறார்.

பாரதியும் இல்லை என்ற நிலை உருவாக, தாயும் சப்போர்ட்  செய்யாமல் இருப்பதால், இனி வெண்பா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

barathi angry towards venba and her mother reacted

People looking for online information on Barathi, Barathi Kannamma, Barathi Kannamma Episode, Rekha, Venba will find this news story useful.