"வாய்ப்புக்காக அப்படி செய்ய மாட்டேன்" - சினிமாவை விட்டு விலகியது ஏன் - கல்யாணி விளக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கல்யாணி. தனது துறுதுறுப்பான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த அவர், ஆண்டாள் அழகர் உட்பட சில சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது பெங்களூரில் கணவருடன் செட்டிலாகி இருக்கும் அவருக்கு குழந்தை இருக்கிறது.

சினிமாவை விட்டு விலகியது ஏன் கல்யாணி விளக்கம்Actress kalyani gives explanation why she quit cinema

இந்நிலையில் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்பது பற்றி தற்போது அவர் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில் "நான் பட வாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்கள் உடனோ அல்லது, இயக்குனர்களுடனோ  வெளியே செல்வது, பேசுவது போன்ற விஷயங்களில் ஈடுபட மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஏனென்றால் அவர்கள் எனது நண்பர்கள் இல்லை. இதனால் சில விஷயங்களில் என்னை தவறாகப் புரிந்து கொண்டார்கள்"என்று கூறியுள்ளார். மீண்டும் திரைத்துறைக்கு வர அவர் தயாராக இருக்கிறாராம்.

"வாய்ப்புக்காக அப்படி செய்ய மாட்டேன்" - சினிமாவை விட்டு விலகியது ஏன் - கல்யாணி விளக்கம்..! வீடியோ

Tags : Kalyani, Jeyam

தொடர்புடைய இணைப்புகள்

சினிமாவை விட்டு விலகியது ஏன் கல்யாணி விளக்கம்Actress kalyani gives explanation why she quit cinema

People looking for online information on Jeyam, Kalyani will find this news story useful.