Reliable Software
www.garudabazaar.com

'படிப்பை தவறவிட்டேன்.. லாஸ்ட் பெஞ்ச் இல்லனா ஃபர்ஸ்ட் பெஞ்ச் இல்ல!' - சீரியலில் ஆரி உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அவ்வப்போது இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Aaari in Barathi Kannamma Raja Rani Mega sangamam viral

அந்த வகையில் தற்போது பாரதி கண்ணமா சீரியலும், ராஜா ராணி -2 சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு குடும்பங்களும் தற்போது சூப்பர் குடும்பம் என்கிற போட்டியில் கலந்துகொள்வது போலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் தான் இந்த சீரியல்களின் நாயகர்களான அருணும் சித்துவும் இரண்டு சீரியல்களின் நாயகிகளிடம் ஒரண்டை இழுக்கும் ரவுடிகளை போட்டு புரட்டி எடுத்த சண்டைக்காட்சிகள் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றனர். அத்துடன் அந்த சண்டைக்காட்சிகள் உருவான விதமும் தனி வீடியோவாக வெளியானது.

இந்த சீரியலில் அண்மையில் தான் குக் வித் கோமாளி பிரபலங்களான சிவாங்கி, பாலா, சரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியும் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது இன்றைய எபிசோடில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான ஆரி கலந்துகொள்கிறார்.

இந்த எபிசோடில் கலந்துகொள்ளும் நடிகர் ஆரி, இந்த சீரியலுக்குள் நடக்கும் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு கொடுத்து கவுரவிக்கிறார். இந்த சீரியலில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆரியாகவே பங்கேற்று பேசிய ஆரி, “ரொம்ப வருஷமா வாழ்க்கையில அடிபட்டு கத்துக்கிட்டேன். ஒவ்வொரு அடியும் வெற்றிக்கான அடி. தோல்வி எதுக்கும் முடிவு இல்லை. அது வெற்றிக்கு முதல் படி. லாஸ்ட் பெஞ்ச் இல்லனா ஃபர்ஸ்ட் பெஞ்ச்க்கே வேலை இல்ல. என் படிப்பும் தோல்வியில் தான் முடிந்ததும்.10வது டுடோரியல் படிக்க எண்ணினேன். முடியல. திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் டிகிரிபடிக்க எண்ணினேன் முடியல. எம்.ஏவும் முடிக்கல. படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு முக்கியமில்ல. வாழ்க்கையே ஒரு படிப்பு தான். ஆனா எப்ப வேணா நடிச்சிரலாம். எல்லா நேரமும் படிச்சிர முடியாது. படிப்ப தவறவிட்டுட்டோம்னு ஒரு வருத்தம் ஒவ்வொரு மேடை ஏறும்போதும் எனக்கு வரும். படிப்பும் முக்கியம், வாழ்க்கை பாடமும் முக்கியம்” என பேசினார்.  

ஆரியை பொறுத்தவரை தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதுடன் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார். சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு ஆரி நடித்து வெளியான நெடுஞ்சாலை படம் வெளியாகி 7 வருடங்கள் ஆனதையொட்டி ஆரி வீடியோ பதிவினையும் பதிவிட்டிருந்தார்.

ALSO READ: "ராஜமவுளி" பட நாயகிக்கு கொரோனா.. நள்ளிரவில் அவரே வெளியிட்ட 'பதிவு!'

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aaari in Barathi Kannamma Raja Rani Mega sangamam viral

People looking for online information on Aari, Barathi Kannamma, Rajarani will find this news story useful.