வேகமாக பரவும் கொரோனா... 'திருமணத்தை' தள்ளிவைத்த பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தியேட்டர்கள், மால்கள், திருமணம் மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அனைத்தும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

திருமணத்தை தள்ளி வைத்த உத்ரா உன்னி | Wedding has been pospond for corona

குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கேரள நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான உன்னியின் திருமணம் கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொச்சியில் சொந்தமாக நடனப்பள்ளி வைத்திருக்கும் இவர் மலையாளத்தில் அதிகமான படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழிலும் ‘வவ்வால் பசங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள்தான் உத்ரா உன்னி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைப்பதாக உத்ரா உன்னி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Entertainment sub editor