மக்களை பத்தி இப்படித்தான் 'நெனைச்சி' இருக்கீங்களா?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று குறை சொல்லும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அளித்து எரிந்து கொண்டிருந்த தீயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார். இதில் ஆரி சக போட்டியாளர்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தார். ஷிவானி, கேபி உள்ளிட்டோரும் இதை கொஞ்சம் சுருக்கமாகவே முடித்து கொண்டனர். ரம்யாவும் மற்றவர்கள் குறித்து பேசும்போது இரத்தின சுருக்கமாக பேசினார்.

'We are not foolish' Netizens discuss about Ramya's speech

ஆனால் ஆரி குறித்து பேசும்போது ரொம்ப நேரம் பேசினார். இடையில் பாயிண்ட் மறந்து போனாலும் கூட நிதானமாக யோசித்து, யோசித்து கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாருக்கு பேக்கேஜ் அதிகம்னு இப்பத்தான் தெரியுது என கிண்டலடித்து வருகின்றனர். ரம்யாவின் ரசிகர்களோ எங்க தலைவி எவ்ளோ தெளிவா பேசுறாங்க. அதுவும் நெத்தில அடிச்ச மாதிரி என பயர் விட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ரம்யா சொன்ன ஒரு பாயிண்ட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆரி மக்களை இன்ப்ளூயன்ஸ் (Influence) செய்வதாக ரம்யா தெரிவித்த கருத்து தான் அது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ மக்களை என்ன முட்டாள்னு நெனச்சுட்டு இருக்கீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'We are not foolish' Netizens discuss about Ramya's speech

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.