'மக்களை' நம்பி இதை செய்றேன்... வெளிப்படையாக பேசிய ஆரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வளையம் சுத்தும் டாஸ்க் ஒன்றையும், குறை சொல்லும் டாஸ்க்கையும் பிக்பாஸ் அளித்தார். இதில் அனைவரும் சக போட்டியாளர்கள் மீது உள்ள குறைகளை சொல்லி சென்றனர். சிலர் நீளமாகவும் விளக்கினர். இதில் கடைசியாக பிக்பாஸ் பெரிய ஆப்பு ஒன்றை வைத்தார்.

'I Hope people will do that' Aari Arjunan says his opinion

அதன்படி போட்டியாளர்கள் இந்த டாஸ்க் அடிப்படையில் தங்களை வரிசைப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். அதன்படி கடைசி இடத்துக்கு அனைவரும் ஆரியை நாமினேட் செய்தனர். இதையடுத்து தனக்கான மதிப்பெண்ணை எடுத்துக்கொண்ட ஆரி இந்த வீட்ல இருக்கற மக்கள் என் பக்கம் இல்லைனாலும், வெளில இருக்க மக்கள் என் பக்கம் இருப்பாங்க அப்படிங்கிற நம்பிக்கைல நான் இதை எடுத்துக்கறேன்.

அப்படி இல்லன்னாலும் ஒரு சல்யூட் பண்ணிட்டு இந்த வாரம் வெளில போறேன் என சிரித்த முகத்துடன் சொன்னார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் நாங்க இருக்கோம் பாஸ்! நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம் என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'I Hope people will do that' Aari Arjunan says his opinion

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.