www.garudabazaar.com

“என்ன திடீர்னு முடிஞ்சிருச்சு!”.. ஷாக் ஆன பிரபல சீரியல் ரசிகர்கள்.. நாயகியின் emotional பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பெருமளவில் ரசிகர்களிடையே ஹிட் ஆகி உள்ளன. அவற்றில் முக்கிய பங்கு சீரியல்களுக்கு உண்டு என்பது மிகை அல்ல.  அண்மையில் கூட, ‘நம்ம வீட்டு பொண்ணு’ மற்றும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என 2 புதிய சீரியல்கள் அடுத்தடுத்து களமிறங்கியுள்ளன.

vijay tv popular serial comes to end actress emotional post

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மற்றுமொரு முக்கியமான சீரியலான அன்புடன் குஷி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. ஆம், ரசிகர்களின் வரவேற்பை பெற்று திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்றோடு முடிவடைந்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் வேலை செய்து அன்பு என்பவர் தான் இந்த சீரியலில் ஹீரோ. இந்த வீட்டின் முதலாளியின் மகள் தான் குஷி. அன்பு கேரக்டரில் நடிகர் பிரஜன், குஷி கேரக்டரில் நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடித்து வந்தனர்.

இந்த சீரியலில் முன்னதாக மான்சி ஜோஷி நாயகியாக நடித்தார். பின்பு குஷி கேரக்டரில் ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடித்தார். பின்னர் கடைசியாக குஷி கேரக்டரில் நடித்து வந்த ஷ்ரேயா அஞ்சனுடன் இந்த சீரியல் நிறைவடைந்துள்ளது. ஜனவரி 27, 2020 அன்று முதல் தொடங்கி ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் 341 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தான், இந்த சீரியலில் குஷி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷ்ரேயா அஞ்சன், சீரியல் நிறைவுபெற்றது குறித்து, "அன்புடன் குஷியின் மிக அழகான பயணம்" என  உணர்ச்சிப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதுடன், ரசிகர்கள் தந்த அன்புக்கும் ஆதரவுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: மரணத்துக்கு முன்.. VJ ஆனந்த கண்ணனின் கடைசி Live Chat.. வைரல் ஆகும் Video!

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv popular serial comes to end actress emotional post

People looking for online information on AnbudanKushi, Shreya Anchan, Trending, TVActress, TVSerial, Vijay Television, Vijaytv will find this news story useful.