www.garudabazaar.com

800 திரைப்படம்... விஜய் சேதுபதியின் இறுதி முடிவு இதுதானாம்... காரணம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை வைத்து 800 என்ற படம் உருவானது. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருந்தார். இந்த படத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே கடுமையான எதிர்ப்பு உருவானது. இதனை அடுத்து விஜய் சேதுபதி என்ன முடிவு எடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

The last decision pf vijay sethupathi regarding 800 film 800 திரைப்படம் விஜய் சேதுபதியின் முடிவு

இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “நன்றி. வணக்கம்” என பதிவிட்டார் விஜய் சேதுபதி. அதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் குழம்பி  வந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் "நன்றி வணக்கம் என்றால், எல்லாம் முடிந்தது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

The last decision pf vijay sethupathi regarding 800 film 800 திரைப்படம் விஜய் சேதுபதியின் முடிவு

People looking for online information on 800, Muthiah muralidaran, Vijaysethupathi will find this news story useful.