www.garudabazaar.com

“என்ன கத்தி பேசுறீங்க.. நானும் பேசுவேன்!” - முதல்முறை நேரடியாக மோதிய இசைவாணி - தாமரை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக பிரியங்கா வெற்றி பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் ஆளுமைகளை நியமிக்கும் பேச்சுவார்த்தையை பிரியங்கா முன்னெடுத்தார். அதில் ரேஷன் விஷயத்தை யார் கவனித்துக் கொள்வது என்கிற பேச்சு வார்த்தை எழுந்தது.

thamarai isaivaani heated fight over ration biggbosstamil5

இதைப் பார்த்துக் கொள்ள அபினய் மற்றும் இசைவாணி இருவரையும் நியமிப்பதாக பிரியங்கா குறிப்பிட்டார். உடனே இடைமறித்த இமான் அண்ணாச்சி, “ரேஷன் விஷயத்துக்கு இந்த இரண்டு பேருமே தேவை இல்லை. இவர்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள். ஒத்துப் போகமாட்டார்கள். அபினய், இரண்டு வாரமாக இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். அவரே இந்த முறை தனக்கு இது வேண்டாம் என்று கூறி இருந்தார்.” என்று கூற, அபினய், “இசைவாணி மட்டுமே இருக்கட்டும்.. பரவாயில்லை” என்று கூறினார்.

இதேபோல், “இசைவாணி முடிந்து விட்டது... இந்த பொருள் இவ்வளவுதான்.. இதற்குமேல் இல்லை என்று கைவிரித்தால் நாம் எதுவும் வருத்தப்பட்டு கொள்ளக்கூடாது.. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்!” என்று இமான் அண்ணாச்சி கூறினார்.

இதனை தொடர்ந்து, இது குறித்து கேள்வி எழுப்பிய தாமரை, “இதில் இவ்வளவு தான்.. இந்த பொருள் என இசைவாணி ஏதேனும் சிக்கல் பண்ணுவாரா? உதாரணத்துக்கு 5 தக்காளிகள் நான் கேட்டால், 3 தக்காளிகள் தான் தருவாரா?” என்று தாமரை கேள்வி கேட்டார்.

அதற்கு முதற்கட்டமாக, பிரியங்காவுக்கு பதிலளித்த இசைவாணி, “ஒரு வாரம் முழுவதும் அந்த பொருட்கள் பயன்படுவதற்கான திட்டத்தைத்தான் நான் செய்தேனே தவிர, ஒன்றையும் பாதுகாப்பாக ஒளித்து வைக்க கூடிய எண்ணம் எனக்கு இல்லை” என்று கூறினார்.

பிறகு இமான் அண்ணாச்சி கூறும்பொழுது, “இசைவாணி இருப்பது பிரச்சினை இல்லை. ஒரு ஆளை மாற்றி பாருங்களேன் என்று தான் கூறுகிறேன்!” என்று சொன்னவுடன், “சிபி நீ பார்க்கறியா?” என பிரியங்கா கேட்க, சிபி ஆமோதித்தார்.

இந்த விஷயம் இப்படி முடிய, மீண்டும் தொடர்ந்த இசைவானி, “இருப்பினும் இது குறித்து நீங்கள் கேட்டதற்கு நன்றி .. எல்லாரும் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.. தாமரை அக்கா சொல்வதிலிருந்து அவர் புரிந்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்!” என்று கூறினார்.

இதனை அடுத்து, தாமரை, இசைவாணியிடம் மீண்டும் மீண்டும் இதை விளக்கிச் சொல்ல முற்படும் போது அதிக சத்தத்தோடு பேச, அவர் சொல்லவரும் கருத்தை கேட்பதற்கு முன் இசைவாணி கையெடுத்து கும்பிட்டு விட, உடனே கோபப்பட்டு தாமரை, “கும்பிட்டால் என்ன அர்த்தம் பாப்பா? சொல்ல வரும் முன்பே கையெடுத்துக் கும்பிட்டாள் என்ன அர்த்தம்?” என்று இன்னும் ஆவேசமாக பேசத் தொடங்கினார். 

இதற்கு இசைவாணி, “என்ன கத்தி பேசுறீங்க? உங்களுக்கு மட்டும்தான் கத்திப் பேச தெரியுமா? நானும் கத்தி பேசுவேன். எல்லார்கிட்டயும் அப்படி பேசுங்களேன் பாப்போம். நீங்க எங்கிட்ட சத்தமாக பேசினால் நானும் பேசுவேன்!” என்று ஆவேசப்பட தொடங்கினார். அப்போது பிரியங்கா தாமரையையும் இசைவாணியையும் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

அதன்பொருட்டு இசைவாணியிடம் வந்து பிரியங்கா கூறும் போது, “இசை, தாமரை கத்தி பேசவில்லை, அவளுடைய டோனே அதுதான்” என்று விளக்க, பதிலுக்கு இசைவாணியோ, “அப்படியானால் நானும் அப்படி என்று அவளிடம் போய் சொல்லுங்கள்!” என்று பதில் கூறினார். இப்படியாக இவர்கள் சண்டை வெடித்தது.

thamarai isaivaani heated fight over ration biggbosstamil5

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, IsaiVaani, Isaivani, Thamarai, Thamarai vs isaivaani, Thamarai vs isaivani, Thamaraiselvi will find this news story useful.