www.garudabazaar.com

திடீரென வெளியேறிய அர்ச்சனா... கலாய்த்த சுரேஷ் சக்ரவர்த்தி.."அவங்க உக்கிர காளி இல்ல ஆனா"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அர்ச்சனா மற்றும் ஆஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வைரலானது. இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். காரணம் போட்டி என்று வந்துவிட்டால் அர்ச்சனா புலியாக மாறி விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அதேபோல் போட்டியில் சுவாரசியத்தை கூட்ட அர்ச்சனா தொடர்வார் என்று பலரும் அக்கருத்து தெரிவித்தனர்.

suresh chakravarthy troll post on archana eviction கலாய்த்த சுரேஷ் சக்ரவர்த்தி

ஆனால் அதிரடியாக அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இதுபற்றி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறும்போது "உக்கிர காளி இல்லை இது வக்ரகாளி. ஆம் கேப்டனாக தான் வெளியேறுகிறார் ஆனால் அன்பு கேங்கின் கேப்டனாக. ஆம் அவர் இந்த விளையாட்டை தனக்கானதாக மாற்றி கொண்டார். இனிமேலாவது  நீங்களும் உங்களுடைய விளையாட்டை உங்களுடையதாக மாற்றி கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

suresh chakravarthy troll post on archana eviction கலாய்த்த சுரேஷ் சக்ரவர்த்தி

People looking for online information on Archana, Suresh Chakravarthy will find this news story useful.