www.garudabazaar.com

நீ பேசறத கேட்கணும்னு 'அவசியமே' இல்ல... அவரா இப்படி பேசுனாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரக்கர்கள் அரச குடும்பத்தினராகவும், அரச குடும்பத்தினர் அரக்கர்களாகவும் மாறினர். முதல் நாளை விட நேற்று எக்கச்சக்க சண்டைகள் நடைபெற்றன. வேல்முருகன், நிஷா தலைமையில் அரக்கர்கள் வேற லெவலில் திட்டம் போட்டு வம்பிழுத்தனர்.

Som Sekhar raised his Voice against Anitha Sampath

ஸ்பிரே, ஆரஞ்சு ஜூஸ், காது அருகே சத்தம் என பயங்கரமான திட்டங்களை அரங்கேற்றினர். மிகப்பெரிய அளவில் சுரேஷ்-சனம் சண்டை வெடிப்பதற்கு முன்பு அனிதா-சோமசேகர் இடையில் ஒரு சண்டை நடந்தது. அரக்கர்கள் கூட்டத்தை சேர்ந்த சோமசேகர் தரையில் ஏதோ கொட்டிவிட அதை சீரியஸாக அமர்ந்து துடைத்து கொண்டிருந்தார்.

அப்போது அரச குடும்பத்தை சேர்ந்த அனிதா அங்கு வந்து சோமசேகரிடம் எதையோ திரும்ப, திரும்ப கேட்டார். பதிலுக்கு சோம், ''நீ பேசறதை கேட்கணும்னு அவசியம் இல்லை,'' என டென்ஷனாகி கத்தி விட்டார். பதிலுக்கு அனிதா, ''இது உன்னோட டவலான்னு தான் கேட்டேன்,'' என்றார். சோமின் கோபத்தை பார்த்த ரசிகர்கள் இவரு இப்படி எல்லாம் பேசுவாரா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Som Sekhar raised his Voice against Anitha Sampath

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.