www.garudabazaar.com

"நீங்க இத பண்ணுவீங்கனு தெரியும்.. நிரூபிச்சிட்டீங்கள்ல?".. இமான் Vs பிரியங்கா சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கக் கூடிய வித்தியாசமான டாஸ்க் நடைபெற்றது.

silent fight during captain task Imman vs Priyanka

இந்த டாஸ்க் படி, மீன் தொட்டி குடுவை ஒன்று கேப்டனாக கலந்து கொள்ள விருப்பப்படும் போட்டியாளர்களுக்கு முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதில் நிரூப், பிரியங்கா, ஐக்கி, சிபி உள்ளிட்டோர் கேப்டனாக விரும்புவதாக நின்று கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் சாயம் கலந்த திரவத்தை எடுத்து வந்து தங்களால், கேப்டனாக விரும்பப் படாத போட்டியாளர்களின் குடுவையில் ஊற்ற வேண்டும். அவ்வாறு ஊற்றும்போது கேப்டனாக விரும்பக்கூடிய போட்டியாளர்கள், தங்களுடைய குடுவையில் சாய நீரை ஊற்ற வருபவரிடம் கன்வின்ஸ் செய்யலாம்.

இந்த நிலையில் தமது குடுவையில் அண்ணாச்சி சாய நீரை ஊற்றப் போகும்போது அதைத்தடுத்த நிரூப், “அண்ணாச்சி நான் எப்போதும் உங்களை கைப்பாவையாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதில்லை. உங்களை கண்ட்ரோல் செய்ய நினைப்பதில்லை. நீங்களும் அவ்வாறு என்னை கைப்பாவையாக்க நினைத்ததில்லை” என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது பிரியங்கா, “பிறகு எதற்காக இமான் அண்ணாச்சியை கடைசியாக வரச் சொன்னாய்?” என்று பொம்மை டாஸ்க்கை மறைமுகமாக குறிப்பிட்டுச் சொன்னார். அப்போது இமான் அண்ணாச்சி, “இந்த புரிதல் பிரியங்காவிடம் தான் குறைவாக இருக்கிறது!” என்று சொல்லி பிரியங்காவின் குடுவையில் சாய நீரை ஊற்றி விட்டு செல்கிறார். 

பிரியங்காவோ, “இது நான் எதிர்பார்த்தது தான். அண்ணாச்சி உங்க வார்த்தையை நீங்க எப்படி மாத்துவீங்க என்று எனக்கு தெரியும். இனிமேல் சத்தியமாக உங்களிடம் எதுவும் நான் எதிர்பார்க்க மாட்டேன். மீண்டும் ஒரு முறை இதை நீங்கள் நிரூபித்ததற்கு நன்றி!” என்று சிரித்துக் கொண்டே கூறினார். எனினும் இந்த டாஸ்கின் இறுதியில் பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வார கேப்டன் ஆனார். 

silent fight during captain task Imman vs Priyanka

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, ImmanAnnachi, Niroop, NiroopNandakumar, Priyanka, Priyanka Deshpande will find this news story useful.