"நான் முதல்லயே பாடிட்டேன்".. தளபதி சொன்ன க்யூட் காரணம்.. விஜய் அம்மா பகிர்ந்த குட்டி ஸ்டோரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஏப்ரல் மாதம், 13 ஆம் தேதியன்று நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த நிலையில், படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

Shoba about singing song with vijay in vishnu movie

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த "தளபதி 66" திரைப்படத்தில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷ்யாம் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முதல் முறையாக, விஜய் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

விஜய் அம்மா சொன்ன சுவாரஸ்ய தகவல்

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக தளபதி 66 ரிலீசாகும் என்றும் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாயான ஷோபா, Behindwoods நிகழ்ச்சியில் விஜய் குறித்து தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

டான்ஸ், நடிப்பு என பட்டையைக் கிளப்பும் விஜய், ஏராளமான திரைப்பட பாடல்களையும் பாடி அசத்தி உள்ளார். பீஸ்ட் படத்தில் அவர் பாடி இருந்த ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே, முதல் முதலாக விஜய்யுடன், ‘விஷ்ணு’ படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் இணைந்து பாடிய ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’ பாடல் அனுபவம் பற்றி ஷோபா பகிர்ந்துள்ளார்.

ஃபர்ஸ்ட்'ல பாடிட்டு வந்துட்டாரு...

விஜய்யின் தாயார் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ‘ஒரு குட்டி ஸ்டோரி ஒரு கர்நாடிக் பாட்டு’ என்ற தொடரில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். மேலும், Behindwoods TV யூடியூப் சேனலில் இந்த நிகழ்ச்சி, பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஷோபா, "விஜய்யுடன் நான் இணைந்து முதல் முறையாக பாடி இருந்தது, விஷ்ணு படத்தில் தான். தேவா சார் இசையில், அந்த பாடலை சேர்ந்து பாட போகிறோம் என்பது தெரியும். ஆனால், விஜய் முதலிலேயே சென்று பாடிவிட்டு வந்தார். ஏன் முன்னாடியே பாடி விட்டு வந்தாய் என நான் கேட்ட போது, 'உங்களுடன் சேர்ந்து நீங்கள் பாடினால், என்னை விட நீங்கள் சிறப்பாக பாடுவீர்கள் என்பதால் தான்' என என்னிடம் விஜய் கூறினார். இரண்டு பேரும் சேர்ந்து பாடிய அந்த பாடல், பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது" என ஷோபா தெரிவித்தார்.

அதே போல, ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’ பாடலின் சில வரிகளையும், ஷோபா பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shoba about singing song with vijay in vishnu movie

People looking for online information on Shoba chandrasekar, Thalapathy Vijay, Vishnu Movie will find this news story useful.