இனிமே இந்த சீரியலில் நீலிமா ராணி இல்லையாம்..! என்ன காரணம் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி, நடித்து கொண்டிருந்த சீரியலில் இருந்து விலகும் தன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரண்மனை கிளி சீரியலில் நீலிமா ராணி | Serial Actress Neelima Rani quits her acting in Aranmanai Kili Serial.

சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருபவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். நீலிமா ராணி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி தொடரில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அரண்மனை கிளி சீரியலில் இருந்து விலகும் தன் அறிவிப்பை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''கேமராவின் முன்னால் நிற்கும் போது நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன். சிறுவயதில் இருந்தே நான் நடித்து வருகிறேன். தற்போது வாழ்க்கையில் சில மாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். அந்த மாற்றங்களை எதிர்ப்பார்ப்புடன் எதிர்கொள்ள காத்திருக்கிறேன். அதனால் bye துர்கா. உன்னை கண்டிப்பாக மிஸ் செய்வேன். நண்பர்களோ, ரசிகர்களோ, எப்படி கூப்பிட்டாலும் நீங்கள் தான் என் பலம். உங்கள் வேண்டுதலில் என்னையும் வைத்து கொண்டு, என்னை வாழ்த்துங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor