www.garudabazaar.com

'மகனை பறிகொடுத்த சில நாட்களிலே'.. குடும்பத்தில் நேர்ந்த பேரிழப்பு! சோகத்தில் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலகில், திரைப் பிரபலங்கள் தங்களுடைய நெருங்கிய உறவினர்களை அடுத்தடுத்து மரணத்தின் கைகளில் பறிகொடுக்கும் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Serial actress kavitha loses husband after her son dead

பிரபல சீரியல் நடிகை கவிதா, தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு, தசரதன் என்கிற கணவரும், சாய்ரூப் என்கிற மகனும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, இவருடைய மகன் சாய்ரூப் மற்றும் தசரதன் ஆகியோர், கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே தனியார் மருத்துவமனையில் அண்மையில்தான் கவிதாவின் மகன் சாய்ரூப் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ஆனால், தமது மகன் மரணம் அடைந்த செய்தியை அடுத்து, கவிதா சோகத்தில் இருந்த நிலையில் மகனை பறிகொடுத்த 12 நாட்களில் இன்னொரு துயர சம்பவம் அவரது குடும்பத்தில், அடுத்த பேரிடியாக நிகழ்ந்துள்ளது. ஆம், கவிதாவின் கணவரான தசரதன் ஜூன் 29-ஆம் தேதி உயிரிழந்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் வெற்றிகரமான தம்முடைய நடிப்பை பதிவு செய்த கவிதா, குறிப்பாக தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம் உள்ளிட்ட திரைப்படங்களில் தம்முடைய நடிப்பால் முத்திரை பதித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகனை பறிகொடுத்த அடுத்த 12 நாட்களில் கணவனை பறிகொடுத்த கவிதாவின் இந்த நிலை பலரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஆறுதல் கூறி வருவதுடன், அவருடைய குடும்பத்தில் நேர்ந்துள்ள, இந்த இழப்புகளுக்கு திரையுலகம் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: Video: 'தளபதி' விஜயுடன் ராஷ்மிகா எப்போ படம் பண்ணுவாங்க?..  fans-க்கு அவரே சொன்ன Viral பதில்!

Serial actress kavitha loses husband after her son dead

People looking for online information on Actress, Enrenrum Punnagai, Kavitha, Serial Actress Kavitha will find this news story useful.