RRR Others USA

இதுக்கு தான் அழுது ஃபீல் பண்ணாங்களா? தாமு வைத்த ட்விஸ்ட்.. உறைந்து நின்ற குக் வித் கோமாளி செட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியின் முதல் இரண்டு சீசன்கள், பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

reason behind emotional scenes in cwc 3 revealed

குக் வித் கோமாளி என்றாலே, அதன் பெயரிலேயே வரும் கோமாளிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறினாலும், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாத ரசிகர்கள், கோமாளிகள் என்ட்ரிக்கு தான் உற்சாகம் அடைகின்றனர்.

இதற்கு காரணம், சமையல் தெரிந்த போட்டியாளர்களுக்கு உதவியாக, எதுவுமே தெரியாமல் ஜோடி போடும் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் தான்.

குக் வித் கோமாளி 'சீசன் 3'

இந்த மூன்று சீசன்களிலும், கோமாளிகளாக வந்த புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோரின் லூட்டிகள், ரசிகர்களை பெருமளவு ஈர்த்திருந்தது. முந்தைய இரண்டு சீசன்களின் வெற்றியால், தற்போது 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியும் நடைபெற்று, வார இறுதியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் குக்குகளாக அம்மு அபிராமி, அந்தோனி தாசன், ராகுல் தாத்தா, ரோஷினி, கிரேஸ் கருணாஸ், ஷ்ருதிகா அர்ஜூன், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யூலேகா ராமன், மனோ பாலா ஆகியோர் களமிறங்கி இருந்தனர்.

குழப்பத்தை ஏற்படுத்திய ப்ரோமோ

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு  முன் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ ஒன்று, ரசிகர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. பொதுவாக, குக் வித் கோமாளி என்றாலே, நிகழ்ச்சி முழுவதும் கலகலப்பாக தான் இருக்கும். நடுவர்கள் தொடங்கி, போட்டியாளர்கள் வரை ரகளை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

reason behind emotional scenes in cwc 3 revealed

ஆனால், அந்த ப்ரோமோவில், செஃப் தாமு கண் கலங்கியபடி மன்னிப்பு கேட்க, போட்டியாளர் கிரேஸ், கோமாளிகள் சுனிதா, மணிமேகலை உள்ளிட்ட பலர் கண்ணீர் விட, மற்றவர்கள் சோகத்தில் மூழ்கி போயுள்ளனர். எத்தனை சீசன்கள் வந்தாலும், இப்படி ஒரு காட்சிக்கு குக் வித் கோமாளியின் இடமிருக்குமா என நினைத்த ரசிகர்கள், இந்த ப்ரோமோவின் காரணத்தினால், சற்று குழப்பம் அடைந்திருந்தனர்.

ட்விஸ்ட் வைத்த தாமு

தொடர்ந்து, வார இறுதியில் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ட்விஸ்ட் ஒன்று இருந்தது. நேற்று (03.04.2022) ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், எலிமினேட் சுற்று கடைசியாக நடந்தது. இதில், போட்டியாளர்கள் சந்தோஷ் பிரதாப் மற்றும் ரோஷ்னி பிரியன் இருந்தனர்.

reason behind emotional scenes in cwc 3 revealed

அப்போது, இருவரில் ஒருவர் இன்று வெளியேறப் போவதாக நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் அறிவிக்க, போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் கண்ணீர் வடிக்கத் தொடங்கினர். இதனால், கடைசி சில நிமிடங்கள், சோக மையமாக இருந்தது. வெளியேறப் போவது யார் என்பதை சொல்ல வந்த தாமுவும், "நான் வருத்தமாக இருக்கிறேன். என்னை மன்னிக்கவும்" எனக்கூறிய படி, கண் கலங்குகிறார்.

இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

இதனால், அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்து போக, மறுநொடியே ஷாக் கொடுத்தார் தாமு. "இன்று எலிமினேஷன் இல்லை" என அவர் சொன்னதும், ஒட்டுமொத்த குக் வித் கோமாளி செட்டும் அதனை ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. கண்ணீரில் இருந்த அனைவரும், ஒரு நிமிடம் ஆனந்தத்தில் தத்தளிக்க, குக் வித் கோமாளி ரசிகர்களும் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

கடைசி நிமிடம் வரை த்ரில்லாக கொண்டு போய், இன்ப அதிர்ச்சி அளித்த நடுவர்களின் பெர்ஃபார்மன்ஸ் பற்றியும், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

reason behind emotional scenes in cwc 3 revealed

People looking for online information on Chef Dhamu, Cook with comali, Cook With Comali Season 3, CWC 3, Roshni Haripriyan, Roshni Priyan, Santhosh Prathap will find this news story useful.