www.garudabazaar.com

Video: எது பாசிப்பருப்புல 'சாம்பார்' வைக்க முடியாதா?... இதென்ன புது 'புரளி'யா இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிச்சன் டீமுக்கும் பிக்பாஸ் வீட்டிற்கும் ஏதோ பந்தம் இருக்கும் போல. எல்லா சண்டையும் அங்கிருந்து தான் தொடங்குகிறது. அதேபோல இந்த நான்கு சீசன்களிலும் முதல் சண்டை கிச்சன் டீமில் இருந்து தான் தொடங்கியதாக ரசிகர்கள் வேறு புள்ளிவிவரம் சொல்லி வருகின்றனர். நேற்றும் அதுபோல ஒரு பெரும் சண்டை தொடங்கி, சற்று நேரத்தில் திசைமாறி போன புயல் போல ஆகிவிட்டது.

Really we can't use Moong Dal for Sambar?, Netizens Reacts

அனிதா, சனம் இருவரும் கிச்சன் டீமில் இருந்தனர். இதில் சனம் சமைத்து கொண்டிருக்க, அனிதா எதையோ செய்து கொண்டிருந்தார். தொடர்ந்து ரியோவிடம் அவர் ஆலோசனை கேட்க, சோம் அவரை கிண்டல் செய்து எஸ்கேப் ஆகிவிட்டார். கடைசியில் அனிதா கிச்சனை விட்டு சென்று ரூமில் படுக்க, ஆஹா அடுத்த சண்டை ஸ்டார்ட் ஆகிருச்சா? என லேசாக ஜெர்க் ஆனது. தொடர்ந்து அனிதாவை சமாதானம் செய்ய ஆரி  வந்தார்.

அவரிடம்  பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது என்று அனிதா கத்த, என்னடா இது நமக்கு வந்த சோதனை என்பதுபோல ஆரி திகைத்து நின்று விட்டார். அதாவது கிச்சனில் சமைக்க சென்ற அனிதா அங்கு தேடிப்பார்த்து பருப்பு இல்லை என்பது போல முதலில் சொல்லி விட்டார். பின்னர் அர்ச்சனா வந்து பாசிப்பருப்பை எடுத்து கொடுத்ததும் பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது  என அதிலேயே நின்று விட்டார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாதுன்னு சொல்லி நான் இப்போ தான் கேட்குறேன், என கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Really we can't use Moong Dal for Sambar?, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.