www.garudabazaar.com

"தேவயானிக்கு என்ன ஆச்சு??".. "மாமியாருக்கு ஒண்ணுன்னதும் பதறிய பவித்ரா..‌ செம்ம சீன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தேவயானி, தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள சீரியல் தான் 'புது புது அர்த்தங்கள்'.

Pudhu pudhu arthangal pavithra action after devayani collapsed

சூ* வெப்பாங்க, போடா *.. அனிதாவா இப்படி பேசுறது? அக்னி குண்டமான Bigg Boss Ultimate வீடு

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு, தேவயானி இதற்கு முன்பு நடித்து வந்த தொடர்களை போலவே வரவேற்பு உள்ளது.

இந்த தொடரில் கணவரை இழந்த மனைவியாக வரும் தேவயானி, தன்னுடைய மாமனார் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலை

மேலும், தேவயானிக்கு ஒரு மகனும், மருமகளும் உள்ளனர். இதனிடையே, சந்தர்ப்ப சூழ்நிலை ஒன்றின் காரணமாக, தொடரின் நாயகனாக வரும் சமையல் கலை நிபுணர் அபிஷேக், தேவயானிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். இதன் காரணமாக, தேவயானியை வெறுக்கத் தொடங்குகிறார் அவரது மாமனார்.

 Pudhu pudhu arthangal pavithra action after devayani collapsed

சிக்கலில் மாட்டிய மகன்

ஆரம்பத்தில் தேவயானியின் மகனுக்கும், இது பிடிக்காமல் போக, மெல்ல மெல்ல அவர் தாயின் சூழ்நிலையை அறிந்து கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டார். இதனிடையே, ஆதிரா என்ற பெண்ணின் வலையில், சிக்கப் பார்த்தார் தேவயானியின் மகன். ஆனால், அபிஷேக் மற்றும் தேவயானி ஆகியோர் இணைந்து, மகனை காப்பாற்றி அனைத்து சிக்கலில் இருந்தும் அவரை மீட்டெடுத்தனர்.

கோபத்தில் மருமகள் பவித்ரா

இது ஒரு புறம் இருக்க, தன்னிடம் ஏன் இதை எல்லாம் மறைத்து விட்டீர்கள் எனக்கூறி, தேவயானியின் மருமகள் பவித்ரா கோபம் கொள்கிறார். இந்த தொடரில் வரும் பவித்ரா கதாபாத்திரம், மிகவும் துணிச்சலாக, பெண்ணியம் வசனம் பேசும் குணம் கொண்டதாகும். இதனால், கணவர் மற்றும் மாமியார் செயலால், கோபத்தில் இருக்கிறார் பவித்ரா.

 Pudhu pudhu arthangal pavithra action after devayani collapsed

கதறித் துடித்த தேவயானி

மேலும், இப்படி பல இக்கட்டான சூழலின் பெயரில், அனைவரும் தனித் தனியாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருக்கும் தேவயானி, காய்கறி வெட்டும் போது, கையில் காயம் ஏற்பட்டு, தவறி கீழே விழ, வழியால் துடி துடிக்கிறார். உடனடியாக மருமகள் பவித்ராவுக்கு போனில் அழைத்த தேவயானி, "நான் விழுந்துட்டேன் மா. என்னால எந்திரிக்க முடியல" என கூறிக் கொண்டே மயக்கம் அடைந்து விடுகிறார்.

அதிர்ச்சியில் பவித்ரா

மாமியாரின் நிலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவித்ரா, அனைத்தையும் மறந்து விட்டு, உடனடியாக மாமியார் வீட்டுக்கு வந்து அவரைத் தூக்கிக் கொண்டே நடந்து செல்கிறார். இது தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. அனைத்தையும் மறந்து, மாமியாருக்கு ஒன்று என்றவுடன் ஓடி வந்த பவித்ராவின் குணத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே வேளையில், தேவயானியின் நிலை என்னவாக இருக்கும் என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி கொடுத்த என்ட்ரி.. ஷாக் ஆகி ஓடி ஒளிந்த கோபி.. ரணகளம்.. இதோட கோபி கத ஓவர்..

தொடர்புடைய இணைப்புகள்

Pudhu pudhu arthangal pavithra action after devayani collapsed

People looking for online information on தேவயானி, புது புது அர்த்தங்கள், மருமகள் பவித்ரா, Devayani, Pudhu Pudhu Arthangal, Pudhu pudhu arthangal pavithra, Pudhu pudhu arthangal Serial, Pudhu pudhu arthangal serial Episode will find this news story useful.