72 லட்சம் ரசிகர்கள், நடிகையின் திடீர் முடிவு - என்ன காரணமாக இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தின் ‘மாணிக்ய மலரேயா பூவி’ என்ற பாடல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி யூ ட்யூப்பில் வெளியானது. அதில் நடித்த இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கண் அசைவுகள் மற்றும் முக பாவங்கள், அந்த வீடியோவை பார்த்த அனைவரையும் வெகுவாக கவர, இணையம் முழுவதும் வைரலானது.

Priya Prakash Varrier decision to deactivate her instagram page

அதன்பின் தனக்காக ஒரு புதிய இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார் ப்ரியா வாரியர். ஆச்சரியப்படுவதற்கு எல்லாம் நேரமே கிடைக்காமல், ஒரே நாளில் 25 லட்ச பார்வையாளர்களை அவருக்குப் பெற்று தந்தது இன்ஸ்டாகிராம். தவிர கூகுள் சர்ச்சில் அதுவரை அதிகம் தேடப்பட்டவரான சன்னி லியோனை தாண்டி, அந்த லிஸ்டிலும் இடம் இடித்தார் ப்ரியா. அவரை பிரபலப்படுத்திய பாடல் காட்சியின் படமும் 2019-ம் ஆண்டு திரைக்கு வர, ப்ரியாவுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள்.

சினிமாவிலும் சில வாய்ப்புக்கள் கிடைத்தபடி இருக்க, படங்களில் தொடர்ந்து நடித்த வந்த அவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். கடந்த ஆண்டு அவர் நடித்த ஸ்ரீதேவி பங்களா என்ற படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதற்குக் காரணம் டைட்டில் பிரச்சனை. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தரப்பிலிருந்து தடை உத்தரவு கோரப்பட்டிருக்கிறது. லாக்டவுன் முடிந்த பின் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 72 லட்சம் பேர் இன்ஸ்டாவில் ப்ரியாவைப் பின்தொடர்ந்து வந்த நிலையில்,  திடீரென்று அவர் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிவிட்டார்.  தன் திறமைகளின் மூலமே அறியப்படவேண்டும், அதீதமாக கவனப்பட்ட சோஷியல் மீடியா புகழ் தேவையில்லை என்று ப்ரியா நினைப்பதால் இன்ஸ்டாவிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்று அவரது ரசிகர்களில் சிலர் கூறுகின்றனர். மேலும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரை வசைபாடியும், கிண்டல் செய்தும் வரும் ஃபோலோயர்களு காரணம் என்றும் கூறப்படுகிறது.  ஆனால் இதற்கான காரணத்தை அதிகாரபூர்வமாக ப்ரியா இன்னும் வெளியிடவில்லை.

ப்ரியா ப்ரகாஷ் வாரியருக்கு திருச்சூர் சொந்த ஊர். இவர் ஒரு தொழில்முறை மோகினியாட்டக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor