"ஆரி ஜெயிச்சத நடக்கக்கூடாத சம்பவம் மாறி பாத்தாங்க"... விஜய் டிவி பிரபலம் எழுப்பிய கேள்வி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ்  வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

popular vijay tv celebrity about aari விஜய் டிவி பிரபலம் எழுப்பிய கேள்வி

இந்நிலையில் இதுபற்றி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "ஆரி ஜெயித்துவிட்டார். ஆனால் அவர் ஜெயித்ததை மற்ற போட்டியாளர்கள்ஏதோ துர்சம்பவம் நடந்தது போல பார்த்துக் கொண்டிருந்தனர். சமூக வலைதளங்களில்  வைரலாகும் புகைப்படங்களை வைத்து சனம் அனிதா சுரேஷ் வேல்முருகன் தவிர ரம்யாவும், ஆஜித்தும் ஏன் அப்படி சோகமாக இருக்க வேண்டும், அல்லது நிஷாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன் சொல்லும் பொழுது கூட பலமுறை ரம்யாவை புன்னகை மன்னி  என்று கூறியிருக்கிறார். அதற்கு ரம்யா என்னுடைய  இயல்பே இப்படிதான், சிரித்துக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறுனார். ஆனால் அன்று என் அப்படி இருந்தார் என்பதை அவர்தான் ரசிகர்களுக்கு சொல்லவேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஆரி ஜெயிச்சத நடக்கக்கூடாத சம்பவம் மாறி பாத்தாங்க"... விஜய் டிவி பிரபலம் எழுப்பிய கேள்வி...! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular vijay tv celebrity about aari விஜய் டிவி பிரபலம் எழுப்பிய கேள்வி

People looking for online information on Aari, James vasanthan will find this news story useful.