அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமந்தா - சைதன்யா பிரிவு முடிவு.. முதல் முறை மனம் திறந்த நாகார்ஜூனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பாணா காத்தாடி தொடங்கி பல திரைப்படங்களில் நடித்த சமந்தா, விஜய் முதலான முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், தெலுங்கிலும் பிரபல நடிகையாக உருவெடுத்து, தென்னிந்திய நடிகையாக புகழ்பெற்றார்.

Nagarjuna first tweet over Samantha Naga Chaitanya separation

தெலுங்கு நடிகரும் மற்றும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுடன் சில படங்களில் நடித்த சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிகை சமந்தா ஓ பேபி, நான் ஈ, யூ டர்ன் உள்ளிட்ட பெண் மைய முக்கியத்துவ படங்களில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

ஆனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையே சமீப காலமாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா உறவு சிக்கல்கள் இருப்பதாக இணையவாசிகள் தொடர்ந்து பேசி வந்தனர். முன்னதாக சமந்தா திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த போது அங்கு நபர் ஒருவர் இதுகுறித்து கேட்டதற்கு எரிச்சலாக சமந்தா பதிலடி கொடுத்திருந்தார். இதனிடையே கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து, வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம்  திரையரங்கில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இப்படம் தொடர்பான சந்திப்பாக, பாலிவுட் நடிகர் அமீர்கான், நாக சைதன்யாவின் இல்லத்தில் விருந்தில் கலந்து கொண்டபோது, அதில் சமந்தா கலந்துகொள்ளாதது, முன்னதாக சமந்தா தம் ட்விட்டரில், சமந்தா அக்கினேனி என்று இருந்த பெயரை சமந்தா ரூத் பிரபு என மாற்றியது என பலவற்றையும் வைத்து இணையவாசிகள் பலரும் இந்த தம்பதியரின் உறவு குறித்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.

இதன் பின்னர், தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, ட்விட்டரில் பகிர்ந்த சமந்தா, “இது செம அழகு மாமா” என்று தம் உறவுமுறையை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தார். இதனால் சமந்தா குடும்ப விவகாரம் குறித்த பேச்சுகள் வதந்தியாக கண்டுகொள்ளப்பட்டன.

முன்னதாக, “இந்த வதந்திகளை பொழுதுபோக்கில் மக்கள் கடந்து போய்விடுவார்கள். அடுத்த விஷயம் வந்துவிடும். இந்த உண்மையை உணர்ந்தவுடன் அவை என்னை பாதிக்கவில்லை” என  நாக சைதன்யா குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு நேரலை வீடியோ ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, தான் மும்பை செல்வது உள்ளிட்ட வதந்தி மட்டுமல்லாமல் பல வதந்திகள் பரவுகின்றன என்றும், இவை எல்லாம் எங்கு தொடங்கியது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தாங்கள் இல்வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அந்த அறிவிப்புகளில் இருவருமே, “நாங்கள் மிகவும் ஆலோசித்தபின் அவரவர் பாதைகளில் செல்ல கணவன் மற்றும் மனைவி உறவில் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டோம். ஒரு தசாப்தத்திற்கும் மேலான நட்பைப் பெற்றதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த கடினமான நேரத்தில் எங்கள் ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. ”  என குறிப்பிட்டிருந்தனர்.

ரசிகர்களையும் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா, தமது சமூக வலைதளத்தில், “கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன்! சம்முவுக்கும்(சமந்தா) சைக்கும்(சைதன்யா) இடையில் நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.

மனைவி மற்றும் கணவருக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். இருவரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். என் குடும்பம் எப்போதும் இவர்கள் உறவை போற்றும். சம்மவுடன் செலவிட்ட தருணங்கள், அவர் எப்போதும் எனக்கு பிரியமானவராக இருப்பார்! கடவுள் அவர்கள் இருவரையும் வலிமையுடன் வைத்திருப்பாராக!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Nagarjuna first tweet over Samantha Naga Chaitanya separation

People looking for online information on Naga chaitanya, Naga Chaitanya samantha, Nagarjuna, Nagarjuna Akkineni, Samantha, Samantha Akkineni, Samantha Naga Chaitanya, Samantha ruth prabhu will find this news story useful.