'ஷூட்டிங் இல்லாததால், கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்.!' . இதுதான் காரணமாம்.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகர் ஷூட்டிங் இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ள விஷயம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் அடக்கம்.
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. மராத்தி நடிகரான ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது கொரோனா வைரஸ் காரண்மாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, என் அப்பா இந்த வேலையை செய்தார். அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது. இந்த வேலையை எனக்கு எந்த அவமானமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.