Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

போண்டா மணியிடமே 1 லட்ச ரூபாய் திருட்டு.. கூடவே இருந்து நபர் பாத்த பயங்கர வேலை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் போண்டா மணி.

man tried to steal money from actor bonda mani caught

Also Read | VIDEO: அடேங்கப்பா..சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு! சும்மா ஜொலிக்குதே

சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்த போண்டா மணி, அதன் பின்னர் விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

போண்டா மணி நடித்த ஏராளமான காமெடி காட்சிகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாகவே உள்ளது.

இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மணி அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் சிகிச்சைக்காக பண உதவி தேவைப்படுவதாவும் வீடியோ ஒன்றை போண்டா மணி வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், போண்டா மணியின் சிகிச்சைக்காக பண உதவியும் செய்திருந்தனர்.

இதன் பின்னர், சிகிச்சை பெற்ற மணி சமீபத்தில் வீடு திரும்பி இருந்தார். இந்த நிலையில், போண்டா மணிக்கு உதவி செய்வது போல நடித்து நபர் ஒருவர் செய்த காரியம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

man tried to steal money from actor bonda mani caught

நகைச்சுவை நடிகர் போண்டாமணி 2 சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று  தற்போது வீடு திரும்பியுள்ளார். முன்னதாக போண்டா மணி மருத்துவமனையில் இருந்த போது, அவரை நலம் விசாரிப்பது போல திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் ப்ரித்தீவ் என்பவர் வந்துள்ளார். அத்துடன் போண்டா மணியின் குடும்பத்தினருடனும் நன்கு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் ராஜேஷ். இதன் பின்னர்,மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற போண்டா மணியை நேரில் பார்க்கவும் ராஜேஷ் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்போது, போண்டா மணியின் மனைவி மருந்து வாங்கி வர ஏடிஎம் கார்டினை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மருந்து வாங்க போன அந்த நபரோ திரும்பி வரவே இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், பிரபல நகைக்கடையில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கப்பட்டதாக மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

man tried to steal money from actor bonda mani caught

இதனைக் கண்டதும் அதிர்ந்து போன போண்டா மணியின் மனைவி உடனடியாக இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் மீது ஏராளமான புகார்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மருத்துவ உதவி கேட்ட போண்டா மணி வாங்கி கணக்கில் இருந்து நட்பாக பழகிய நபர் பணம் திருடிய சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "பெண் குழந்தை பிறந்து ஒரு வாரமாச்சு".. மகளுடன் இருக்கும் Photo போட்டு நெகிழ்ந்த KPY நவீன்!!

man tried to steal money from actor bonda mani caught

People looking for online information on Bonda Mani, Steal money will find this news story useful.