'பின்னி பெடல் சார் !' - எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய இயக்குநர் வெங்கட் பிரபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடிப்பில் 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா ட்வீட்டர் பக்கத்தில் தன்னிடம் வெங்கட் பிரபு கதை சொன்ன விதம் குறித்து புகழ்ந்து எழுதியிருந்தார்.

Maanaadu director Venkat Prabhu appreciates SJ Suryah for his performance | இந்த சீனுக்காக எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய வெங்கட் பிரபு

இந்நிலையில் ரசிகர் ஒருவர் 'அன்பே ஆருயிரே' பட காட்சியை பகிர்ந்து, எஸ்.ஜே.சூர்யா சார் வேற லெவல் என்று கமெண்ட் செய்திருந்தார். ரசிகரின் பாராட்டுக்கு எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவிக்க, அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, ''என்னுடைய விருப்பமான இடைவேளைக் காட்சிகளில் அதுவும் ஒன்று, பின்னி பெடல் சார்'' என்று பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் நிதின் சத்யா, மரியம் வரட்டும் என்று கமெண்ட் செய்திருந்தார்.

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

Entertainment sub editor