லாக் டவுன் முடியிற வரை காத்திருக்கணும் – குஷ்பு மகளைப் பற்றி உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நடிகை குஷ்பு. தனது கெரியரில் 200 படங்களுக்கு மேல் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி படங்களில் தோன்றியிருக்கிறார். 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த அனைத்து நாயகர்களுடனும் குஷ்பு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

Kushboo Sundar touching post on her daughters birthday| தன் மகளின் பிறந்தநாளில் உருக்கமான பதிவிட்ட குஷ்பு

சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. சில தொலைக்காட்சி சீரியலகளிலும் நடித்த அவர் பல சீரியல்களை தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சியை 2000-ஆவது ஆண்டு திருமண செய்து கொண்டார்.

தற்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தன் மகள் பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இன்று மகளின் பிறந்த நாளை ஒட்டி இப்பதிவை வெளியிட்ட அவர், தன் மகளோடு கழித்த ஒவ்வொரு தருணத்தையும் நினைவு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

10 வயது சிறுமியாகத் தொடங்கி இன்று ஒரு மனைவியாகவும் தாயாகவும் மகள் வளர்ந்து நிற்பதை பார்த்து சந்தோஷம் கொள்வதாக தெரிவித்தார். இன்று கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அது முடியும் வரை மகளின் பிறந்தநாள் விழாவை தள்ளி வைக்க வேண்டியிருக்கிறது என குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor