www.garudabazaar.com

''மேல கை வைச்சா கதை முடிஞ்சுதுன்னு ஒரு போலீஸ் சொன்னாரு..!'' - இளம் ஹீரோ சொல்லும் பகீர் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் தொடர்பாக காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு நம்மிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். 

காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் | kavalthurai ungal nanban team opens on police department and jeyaraj fenix murd

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ஹீரோவானாவர் சுரேஷ் ரவி. இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இத்திரைப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இதில் ரவீனா ரவி, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல்துறையின் நிழல் பக்கங்களை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் எடுத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம் மற்றும் நாயகன் சுரேஷ் ரவி நம்மிடம் பேசினர். அப்போது ஒரு அதிர்ச்சியான தகவலை அவர்கள் தெரிவித்தனர். இத்திரைப்படத்திற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த பொழுது, ஒரு போலீஸ்காரரிடம், ஒருவேளை, ஏதோ ஒரு உணர்ச்சியில் ஸ்டேஷனுகு அழைத்து வரப்பட்டவர்கள், உங்களை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு, ''மேல கை வைச்சா, அவ்ளோதான், கதை முடிஞ்சுது'' என அவர் அசால்ட்டாக தெரிவித்ததாக கூறினார் சுரேஷ் ரவி. 

மேலும் இதுகுறித்து காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு பேசிய முழு வீடியோ இதோ. 

''மேல கை வைச்சா கதை முடிஞ்சுதுன்னு ஒரு போலீஸ் சொன்னாரு..!'' - இளம் ஹீரோ சொல்லும் பகீர் தகவல். வீடியோ

மேலும் செய்திகள்

காவல்துறை உங்கள் நண்பன் படக்குழு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் | kavalthurai ungal nanban team opens on police department and jeyaraj fenix murd

People looking for online information on Kavalthurai Ungal Nanban, Sathankulam Jeyaraj and Fenix, Suresh Ravi will find this news story useful.