www.garudabazaar.com

தலைவர் ரஜினி On Fire.. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் மரணம்.! - ''சத்தியமா விடவே கூடாது''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினி கருத்து | annaatthe actor rajinikanth is extremely angry on sathankulam jeyaran and fenix issue

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சினிமாத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கண்டங்களை முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து தனது கருத்தை காட்டமாக தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து, மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட் முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது, சத்தியமா விடவே கூடாது'' என தெரிவித்துள்ளார். மேலும் கடுமையான கோபத்தில் இருக்கும் தனது புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரஜினிகாந்த் மற்றும் சத்தியமா_விடவே_கூடாது ஆகியவை ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினி கருத்து | annaatthe actor rajinikanth is extremely angry on sathankulam jeyaran and fenix issue

People looking for online information on Jeyaraj and Fenix, Rajinikanth, Sathankulam, Tamilnadu police will find this news story useful.