www.garudabazaar.com

மறைந்த இளையராஜா ஓவியங்கள் பாணியில் வைரல் ஃபோட்டோஷூட்.. அவருக்கே சமர்ப்பித்த கஸ்தூரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்ப் பெண்களை சிறப்பு படுத்தி தத்ரூபமாக ஓவியம் வரைந்து வந்த ஓவியர் இளையராஜா கொரோனாவால் தற்போது மறைந்துள்ளார்.

Kasthuri viral photo shoot based on ilaiyaraja paintings

இந்த மறைவை ஒட்டி தமிழக முதல்வர் பலரும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவின் ஓவியங்களை மாடலாகக் கொண்டு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பற்றி நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “நான்  ஒரு  இளையராஜா விசிறி என்பது எல்லோரும் அறிந்ததே. போன வருடம், அதில் ஒரு முன்னேற்றம் . ஒரு இளையராஜா  இல்லை, இரு இளையராஜா விசிறி. ஓவியர் இளையராஜாவை   எனக்கு அறிமுகப்படுத்தியவர் புகைப்பட நிபுணர் Flashback photography மனோ . 

அவரின் அழகு ததும்பும் சித்திரங்களை ஒரு Theme ஆக வைத்து ஒரு போட்டோஷூட் செய்தோம். அதை அவருக்கே அஞ்சலியாக சமர்ப்பிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இளையராஜா மிக சீக்கிரம் மறைந்ததை என்னால் நம்பவே முடியவில்லை!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: தமிழ்ப் பெண்கள் ஓவியம்னாலே இவர்தான்! பிரபல ஓவியரின் உயிரை பறித்த கொரோனா! இவரது மறக்க முடியாத ஓவியங்களில் சில..

Kasthuri viral photo shoot based on ilaiyaraja paintings

People looking for online information on Artist Ilaiyaraja, Kasthuri Shankar will find this news story useful.