Breaking: அருண் விஜய், கார்த்திக் நரேன் இணையும் படத்தின் டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளார்.

Karthick Naren's next film with Arun Vijay titled Mafia

மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டாரர் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’படமும் அருண் விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது

இந்தப் படத்தை அடுத்து தற்போது அருண் விஜய் பாக்ஸர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அருண் விஜய். அறிமுக இயக்குநர் விவேக் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு மாஃபியா (MAFIA) என்று தலைப்பு வைத்துள்ளார்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.