கடினமாக உழைக்கும் இந்த சூப்பர் ஸ்டார்! யார் இவர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘பயில்வான்’ திரைப்படத்திற்காக தான் கடந்து வந்த பாதை குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Kannada Superstar Sudeep shares motivational tweet about his journey for Pailwaan

தமிழில், ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். கன்னடத்தில் சூப்பர் ஸ்டாரான இவர், தற்போது ‘பயில்வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குஸ்தி வீரராக சுதீப் நடிக்கும் இப்படத்தில் அகன்க்ஷா சிங், சுனில் ஷெட்டி, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பயில்வான் திரைப்படத்திற்காக தான் கடந்து வந்த பாதை குறித்து ட்விட்டரில் ஒரு உதவேகமான பதிவை கிச்சா சுதீப் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘பயில்வான் திரைப்படம் ஒரு சிறந்த அனுபவம். எனது வாழ்வியலையும் மாற்றியது. இப்படத்தில் ஒவ்வொரு விஷயமும் கடினமாக இருந்தது, கஷ்டங்களை கடந்து வர படக்குழுவினர் மிகுந்த உத்வேகம் அளித்தனர். மேலும், நண்பர்களாகிய நீங்கள் பகிர்ந்த ட்வீட்களும் எனக்கு ஊக்கம் அளித்தது. நாளை முதல் பாக்ஸிங் போஸ்டர்’ என பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் போஸ்டர் வரும் ஜூன்.4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருஷ்ணா இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இது தவிர, பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் ‘தபாங் 3’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சுதீப் நடித்துள்ளார்.