www.garudabazaar.com

"கமல்ஹாசன்ங்குற பேர் அழியுதேனு கவலைப்பட மாட்டேன் ".. தான் ஏற்கும் கேரக்டர்கள் குறித்து கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன்,கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து திரை உலகில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Kamal Haasan about people remembering his characters name

Also Read | "உங்ககிட்ட பேச விருப்பமில்ல".. ADK பேச்சை எதிர்த்த பிறகு வெளியேறிய ஷிவின்.. Task வந்தாலே கலவரம் தான்

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த 'விக்ரம்' திரைப்படம், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்திருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். சினிமாவில் தீவிரமாக இயங்கி வரும் கமல்ஹாசன், தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், தற்போது ஒளிபரப்பாகி வரும் 6 வது சீசனையும் தொகுத்து வருகிறார்.

Kamal Haasan about people remembering his characters name

ஒரு வாரம் முழுக்க நடக்கும் சண்டைகள் மற்றும் விவாதங்கள் குறித்து வார இறுதியில் வரும் கமல்ஹாசன் பேசி முடிவை எட்டும் விஷயங்கள், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில், சமீபத்தில் பிக்பாஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து கமல் பேசி இருந்த விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Kamal Haasan about people remembering his characters name

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றிருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணி, ராஜாகுரு, இளவரசி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தோன்றி இருந்தனர். அவர்கள் பெர்ஃபார்ம் செய்தது குறித்து பிக்பாஸ் வீட்டில் இந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய கமல்ஹாசன், "அசீம் உட்பட அனைவருமே தங்கள் பாத்திரத்தில் இருந்து வெளி வந்து விட்டீர்கள். திருவிளையாடல் இருக்கும் காலம் வரை அந்த படத்தில் நாகேஷ் பேசும் ஒரு புகழ்பெற்ற வசனத்திற்கு மதிப்பு உண்டு.

Kamal Haasan about people remembering his characters name

அது என்னவென்றால் பிழைக்கானது கழித்து கொண்டு மீதியை கொடுங்கள் என்று கேட்பார். அதுபோல அனைவரும் பாத்திரத்தில் இருந்து வெளிவந்து விட்டீர்கள். பாத்திரத்தோடு ஒன்ற வேண்டும். படத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயரைச் சொல்லி என்னை அழைக்கும் போது கமல்ஹாசன் என்கிற பெயர் அழிந்து விட்டதே என்று வருத்தப்பட மாட்டேன்.

விக்ரம் என்று அழைக்கிறார்களே என்று சந்தோஷம் தான் படுவேன்.‌ அந்த மாதிரி பாத்திரத்துடன் ஒன்றாமல் நீங்கள் மிஸ் பண்ணி விட்டீர்கள் என்பதைத்தான் ஒரு ரசிகனாக சொல்கிறேன்" என்றார்.

Also Read | "இந்தா வந்துருச்சுல Court டாஸ்க்கு".. ஆரம்பமே சும்மா தீப்பறக்குது.. விக்ரமன் மீது பாய்ந்த வழக்கு!!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan about people remembering his characters name

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay Television, Vijay tv will find this news story useful.