IndParty
www.garudabazaar.com

அவ்ளோ பெரிய 'பஞ்சாயத்து' போய்ட்டு இருக்கு ஆனா... கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் ஆரம்பித்த சண்டை நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. ஜெயிலுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அனிதாவிடம் சமரசம் பேச சென்ற ரியோ மீண்டும் சண்டை போடும்படி ஆகிவிட்டது. நிஷா நம்ம சொன்னதை மீறி செஞ்சாங்க அவங்கள பெஸ்ட் பெர்பார்மரா செலக்ட் பண்ண நீங்க கேப்டன் சொன்னதை செஞ்ச என்ன ஏன் செலக்ட் பண்ணல என்று கேட்டார். இதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

Jithan Ramesh's attitude once again impressed by fans

கடைசியில் இது மேலும் ஒரு சண்டைக்கு வழிவகுத்தது. இதைப்பார்த்த அர்ச்சனா, நிஷா மற்றும் சோமிடம் இவன் ஏன் தேவையில்லாம போய் பேசிட்டு இருக்கான் என்று கேட்டார். பின்னர் அர்ச்சனாவும் சென்று அனிதாவிடம் பேசினார். ஆனாலும் அனிதாவின் கோபம் தீரவில்லை. வாரம் முழுவதும் கேப்டனாக இருந்து எல்லா வேலைகளையும் செய்தும் என்னை எப்படி நாமினேட் செய்து ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. 

பாலாஜி, ரியோ, அர்ச்சனா என பலரும் சென்று அனிதாவிடம் பேசியும் பஞ்சாயத்து முடியவில்லை. ஆனால் இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் அனிதாவுடன் ஜெயிலுக்குள் இருந்த ரமேஷ் தூங்கிக்கொண்டு தான் இருந்தார். அனிதா கோபமாக பேசியும், உரக்க கத்தியும் கூட அவர் அசைந்து கொடுக்கவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் எப்படி பாஸ் இவ்ளோ கூலா தூங்கிட்டு இருக்கீங்க? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Jithan Ramesh's attitude once again impressed by fans

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.