www.garudabazaar.com

நான் அவங்களுக்கு தான் 'சப்போர்ட்' பண்ணுவேன்... ஓபனாக பேசிய போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் யாரையும் வெளியே அனுப்பாமல் பிக்பாஸ் விளையாட்டு காட்டி விட்டார். அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ஆஜீத் ஆகிய 5 பேர் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.

'I will Support those four' says Archana Chandhoke

இதில் மிகவும் குறைவான வாக்குகள் வாங்கிய ஆஜீத் தன்னுடைய எவிக்ஷன் பிரீ பாஸை உபயோகம் செய்து வீட்டில் இருந்து வெளியேறாமல் தற்காத்து கொண்டார். இதை கமல் சொல்வதற்கு முன்பே வெளியில் தெரிந்து விட்டது. கடந்த வாரம் ரேகா வெளியேறியதும் இப்படித்தான் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரியோ, சோம், நிஷா, வேல் முருகன் ஆகியோருக்கு பிரச்சினை வந்தால் நான் அவர்களுக்கு சப்போர்ட் செய்வேன் என அர்ச்சனா ஓபனாக பேசி இருக்கிறார். சனம்-சுரேஷ் பிரச்சினையில் கோபமாக பேசிய அர்ச்சனா அதற்குப்பின் இவர்கள் நால்வருக்கு பிரச்சினை வந்தால் நான் கொந்தளிப்பேன் என கூறியிருக்கிறார்.

அப்போ பிக்பாஸ் வீட்டுக்குள்ள குரூப்பிஸம் இருக்குன்னு ஒத்துக்குறீங்களா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

'I will Support those four' says Archana Chandhoke

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.