www.garudabazaar.com

கடைசில 'இப்படி' பண்ணிட்டீங்களே ஆரி... டென்ஷனாகி 'கேள்வி' கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று மிகவும் அமைதி பூங்காவாக சென்றதால் இன்று வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் குறித்து கமல் பேசி வருகிறார். அவருக்கே உரிய நக்கல் பாணியில் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் விதம் ரசிகர்களை மீண்டுமொரு முறை கவர்ந்துள்ளது. முதல் விஷயமாக ஒவ்வொரு போட்டியாளருக்கும் தான் அளித்த செடிகள் குறித்து விசாரித்தார். இதில் அவரவர்களுடைய செடிகளை காட்டுமாறு கமல் சொல்ல, பலருக்கும் தங்கள் செடிகள் குறித்து மறந்தே போய் விட்டது.

Fans were disappointed by Ari Arjunan’s action in BB house

பொதுவாக வீட்டில் அனைவருடைய செடிகளையும் ரம்யாவே பார்த்து தண்ணீர், டீத்தூள் கொடுத்து காப்பாற்றி வரும் விஷயத்துக்கு வந்துள்ளது.  ஷிவானி தன்னுடைய செடி செத்து போய் விட்டது என சொல்ல, ஆரி தான் செடியை ஒழுங்காக கவனித்து கொள்ளவில்லை என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது ரமேஷ் அதுகுறித்து மறைமுகமாக கிண்டலடிப்பது போல கருத்து தெரிவித்தார்.

இதைக்கேட்ட ஆரி செடிகள் நட்டு கின்னஸ் சாதனை செய்ததை தெரிவித்தார். ஆனால் ரசிகர்கள் ஆரியின் செயலால் வருத்தம் அடைந்துள்ளனர். வெளியில் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை செய்த ஆரி பிக்பாஸ் வீட்டில் கொடுத்த ஒரு செடியை, ஒழுங்காக வளர்க்காமல் விட்டு விட்டது தான் அவர்களின் வருத்தத்துக்கு காரணமாக உள்ளது. மேலும் இதற்கு அவர் கொடுத்த விளக்கமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து இருக்கின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Fans were disappointed by Ari Arjunan’s action in BB house

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.