www.garudabazaar.com

இந்த மாதிரி பண்றது 'அவருக்கு' ஒண்ணும் புதுசுல்ல... வெளுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் பாலாஜி கொளுத்திப்போட்ட வெடி கொளுந்து விட்டு எரிந்தது. சக போட்டியாளர்களும் தங்களது பங்குக்கு அதில் மேலும் எண்ணெய் ஊற்றி அழகு பார்த்தனர். நள்ளிரவில் ஆரி, அனிதா, சனம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பாலாஜி கேப்டன் டாஸ்க் பற்றி பேசினார். ஆரியும் அவரிடம் சகஜமாக பேச, மறுநாள் பாலாஜி அதை அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டார்.

Fans not liked Balaji' Attitude against Aari Arjunan

அவ்வளவு தான் அனிதா, சனம் உள்ளிட்டோர் கூட ஆரிக்கு எதிராக திரும்பிக் கொண்டனர். இதனால் வீடே போர்க்களமாக மாறியது. இடையில் இருவரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு இது செல்ல ஷிவானி ஓடிச்சென்று ரியோவை அழைத்து வந்தார். அதற்குள் சண்டை முடிந்து விட்டது. பின்னர் பாலாஜி, ஆரியின் காலை தொட்டது போல மன்னிப்பு கேட்டார். எனினும் பிரச்சினை இத்துடன் முடியாது என தெரிகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரி அப்படியே சொல்லி இருந்தாலும் அதை எப்படி எல்லார் முன்னாடி சொல்லி அவரை மாட்டி விடலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலாஜிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. ஏனெனில் முன்பொரு முறை அர்ச்சனா எலுமிச்சை தரவில்லை என, சனம் பாலாஜியிடம் சொன்னதை அர்ச்சனாவிடம் பாலாஜி போட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Fans not liked Balaji' Attitude against Aari Arjunan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.