பிரபல பாடகருக்கு கொரோனா... ventilator மூலம் செயற்கை சுவாசம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பல பிரபலங்களுக்கும் பரவி வருகிறது. 

Famous Singer Is In corona After Affected By Corona பிரபல பாடகர் ஆதம் ஷெலெஸிங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் புகழ்பெற்ற பாடலாசிரியர்  மற்றும் பாடகர் 'ஆதம் ஷெலெஸிங்கர்' கொரோனா காரணமாக மருத்துவமனையில் உள்ளார். தற்போது அவரது நிலைமை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அவரது குடுமபத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "எங்கள் மகன் கோமாவில் இல்லை. அவர் சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளப் படுகிறார். எங்கள் மகனைப் பற்றி விசாரிக்கும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். தற்போது அவர் ventilator மூலம் சுவாசம் பெறுகிறார். சீக்கிரமே அவர் குணமாகி வருவார் என்று முழு நிச்சயமாக நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் குணமாகி வர அவரது ரசிகர்கள் வேண்டுதல் செய்து வருகின்றனர்.

Entertainment sub editor