www.garudabazaar.com

நடிகை அளித்த பாலியல் புகார்! முன்னாள் அமைச்சர் மீது போலீஸார் பரபரப்பு நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நாடோடிகள் பட பிரபல நடிகை சாந்தினி.

Ex Minister Manikandan Arrested actress chandini complaint

மலேசியா குடியுரிமை பெற்ற இவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர் அளித்த புகார் மனுவில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி 5 வருடங்கள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அவரால் 3 முறை கர்ப்பம் அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தன்னை மிரட்டியதால் கருவை கலைத்ததாக குறிப்பிட்ட நந்தினி,  மணிகண்டன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Ex Minister Manikandan Arrested actress chandini complaint

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில்  மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மணிகண்டன் தாக்கல் செய்த இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் மணிகண்டனை கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் போலீஸார் முழுவீச்சில் இறங்கினர்.

இந்த சூழலில் தான் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூரில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன்  கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் காவல்துறையினர் வைத்து விசாரணை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Ex Minister Manikandan Arrested actress chandini complaint

People looking for online information on Actress, Chandini, EX Minister Manikandan, Manikandan will find this news story useful.