www.garudabazaar.com
iTechUS

“பிறந்த நாள் பரிசா காவ்யா ?”.. விவாகரத்தில் கையெழுத்து போட்டு கதறி அழுத பார்த்தி..!! Eeramana Rojave 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி வரவேற்பும் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்ப்பதற்கான விஷயங்கள் அடங்கிய விஜய் டிவி சீரியல்களில் இளைஞர்களுக்கு பிடித்தமான சீரியல்களும் இருக்கின்றன.

Eeramana Rojave 2 serial Parthi gives divorce Kavya

அவற்றில் முதன்மையான சீரியலாக ஈரமான ரோஜாவே சீரியல் திகழ்கிறது. இதுவரை ஈரமான ரோஜாவே சீரியல் முதல் சீசன் பல்வேறு பார்வையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பும் உண்டு பண்ணியது. இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.

Eeramana Rojave 2 serial Parthi gives divorce Kavya

இதில் அண்ணன் - தம்பி இருவரும் அக்கா தங்கைகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் காவியா விரும்பியது தன் கணவரின் தம்பியைதான்.  எனினும் விரும்பிய வாழ்க்கையை விட அமைந்த வாழ்க்கையை எப்படி ஏற்று வாழ்கிறார்கள் என்பதே கதை. ஆம், தான் விரும்பியவருடைய அண்ணனைதான் காவ்யா திருமணம் கொண்டார்.

அவருடைய காதலரோ, தன் அண்ணன் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இப்படி இரண்டு ஜோடிகளும் மனம் மாறி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.  இதனிடையே ஜீவா, பிரியா மற்றும் பார்த்திபன், காவ்யா ஜோடிகள் இப்போது ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள தொடங்க, இன்னொரு பக்கம், பார்த்தியின் தாயார் காவ்யாவை வெளியேற்ற பல விஷயங்களை செய்து வருகிறார்.

Eeramana Rojave 2 serial Parthi gives divorce Kavya

இதற்குக் காரணம் காவ்யா இதற்கு முன்பாக யாரையோ காதலித்து விட்டதாக பார்த்தியின் அம்மாவுக்கு தெரிந்து விட்டதுதான். தன் மகன் பார்த்தியின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்பதற்காக காவ்யா, பார்த்தியின் வாழ்க்கையை விட்டு விலகிச் சென்று விட வேண்டும் என்று பார்த்தியின் அம்மா நினைப்பது மட்டுமல்லாமல் அதற்கான காயையும் நகர்த்துகிறார். இதன் நிமித்தமாக பார்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு காவ்யா ஒரு பக்கம் முயற்சித்து வந்தார். அதே சமயம் பார்த்தியின் அதீத அன்பும் காவ்யாவை நெகிழவும் நிலை குலையவும் வைத்தது.

இருப்பினும் கனத்த இதயத்துடன் காவ்யா பார்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட , பார்த்தியின் அம்மாவின் காய் நகர்த்தலால் அது இக்கட்டான சூழ்நிலைக்கு வந்துவிட்டது. இதனால் உடைந்து அழும் பார்த்தி, காவ்யாவின் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடவும் தயாராகி விட்டார். அதற்கு முன்பாக உடைந்து அழுகிறார்.

Eeramana Rojave 2 serial Parthi gives divorce Kavya

இது தொடர்பான புரோமோக்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜீவா மிகவும் குற்றவுணர்வுடன், காவ்யாவிற்கு எந்த நிலையிலும் உதவி செய்ய முடியாமல் இருக்கிறார். தொடர்ந்து இந்த சீரியலை எப்படி எடுத்துச் செல்ல போகிறார்கள் என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும்.

Eeramana Rojave 2 serial Parthi gives divorce Kavya

People looking for online information on Eeramaana rojaave 2, Eeramana Rojave 2 will find this news story useful.