மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைவது குறித்து அவரது அப்பாவும், இயக்குநருமான SAC பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், தனது மகனுமான தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையவிருப்பது குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் SA சந்திரசேகர் நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Director SAC revealed about future collaboration with Thalapathy Vijay as a Producer

கடந்த 2015ம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘கேப்மாரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தற்போது தணிக்கைக்குழு ‘ஏ’சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான SA சந்திரசேகர் Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியளியில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘தளபதி விஜய்யை இயக்கும் திட்டம் இல்லை, ஆனால் ஒரு தயாரிப்பாளராக இணையலாம்’ என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இறுதியாக 2009ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘ஆதி’ திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.