www.garudabazaar.com

'படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு'.! - பிரபல இயக்குநர். - கமன்ட் செய்த 3 பேருக்கு அடித்த ஜாக்பாட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது பதிவுக்கு சிறந்த கமன்ட் கொடுத்த மூன்று பேருக்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் பிரபல இயக்குநர். 

கமன்ட் செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குநர் | Director Gaurav Narayanan gives the best answered netizens film chance

தூங்காநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌரவ் நாராயணன். இதையடுத்து இவர் விக்ரம் பிரபு நடிப்பில் சிகரம் தொடு, உதயநிதி நடித்த இப்படை வெள்ளும் உள்ளிட்ட படங்களை இயக்கினார். மேலும் இவர் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

கமன்ட் செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குநர் | Director Gaurav Narayanan gives the best answered netizens film chance

இந்நிலையில் இயக்குநர் கௌரவ் நாராயணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு சிறப்பான பதிலை கமன்ட்டாக கொடுப்பவர்களுக்கு தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மக்கள் அனைவரும் மிகச்சரியாக நான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார்கள். அவர்கள் சொல்லியதை தான் நானும் சொல்கிறேன். மேலும் என் பதிவுக்கு சிறப்பாக கமன்ட் கொடுத்த மூன்று பேரை தேர்ந்தெடுத்துள்ளேன். அவர்களை கண்டிப்பாக என் அடுத்த படத்தில் நடிக்க வைப்பேன். இதுகுறித்து நானே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தகவல் அனுப்பவுள்ளேன்'' என அவர் தெரிவித்தார். 

 

கமன்ட் செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குநர் | Director Gaurav Narayanan gives the best answered netizens film chance

People looking for online information on Gaurav, Gaurav Narayanan will find this news story useful.