காரில் விழுந்த காங்கிரீட் கல் - அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலத்தில் உடைந்த காங்கிரீட் துண்டு காரில் விழுந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் நடிகை அர்ச்சனா கவி.

Concrete from Metro pillar falls on actress Archana Kavi’s car

அர்ச்சனா கவி கேரளாவைச் சேர்ந்தவர். மலையாள படங்கள் பலவற்றில் நடித்துள்ளஅவர் தமிழில் அரவாண், ஞானக்கிறுக்கன் முதலான படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கும் அபிஸ் மேத்யூ என்பவரை காதலித்து கடந்த 2016 ம் ஆண்டு திருமணம செய்து கொண்டார். அதன்பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இவர் தன் குடும்பத்துடன் கொச்சி விமான நிலையத்திற்கு வரும் வழியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பாலம் ஒன்றின் வழியே கார் செல்லும்போது பாலத்திலிருந்து உடைந்த கல் காரில் விழுந்துள்ளது. காரை நிறுத்தி பார்த்த போது காரின் முன்னிறுக்கையில் கண்ணாடியை உடைத்து ஒரு பெரிய காங்கிரீட் கல் விழுந்துள்ளது. நடிகை அர்ச்சனா ரவி உட்பட அனைவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அர்ச்சனா ரவி மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் போலீஸையும் டேக் செய்து டிரைவருக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மெட்ரோ நிர்வாகம் நாங்கள் டிரைவரை தொடர்பு கொண்டோம் அவருக்கு எந்த காயமும் இல்லை. இந்த விசயத்தில் தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வோம் எனக் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.