www.garudabazaar.com

போக 'வேணாம்னு' எல்லாரும் சொன்னாங்க... ஆனா நான் இதுக்காகத்தான் வந்தேன்... பிரபல நடிகை உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி சற்றுமுன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு முன் இவர்கள் தான் கலந்து கொள்ள போகிறார்கள் என ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் வெளியாகியது.  கிட்டத்தட்ட அதில் உள்ளவர்கள் தான் தற்போது வரை உள்ளே போய் இருக்கிறார்கள்.

Bigg Boss Tamil 4: Rio, Sanam, Rekha and Bala enter house

முதல் போட்டியாளராக ரியோ ராஜ், 2-வது போட்டியாளராக சனம் ஷெட்டி 3-வது போட்டியாளராக ரேகா 4-வது போட்டியாளராக பாலாஜி முருகதாஸ், 5-வது போட்டியாளராக அனிதா சம்பத் என ஐந்து பேர் இதுவரை உள்ளே போய் இருக்கின்றனர். இதில் நடிகை ரேகா தான் ஏன் பிக்பாஸ் போட்டிக்கு உள்ளே வந்தேன் என நடிகர் கமலிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, '' சின்ன வயசுல இருந்தே நான் மத்தவங்கள சார்ந்து இருக்க பழகிட்டேன். மொதல்ல அம்மா, அப்புறம் ஹஸ்பண்ட், இப்போ மகள் இப்படி யாரையாவது சார்ந்தே இருந்துட்டேன். என்ன பத்தி நானே தெரிஞ்சுக்க நெனச்சு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். நிறைய பேரு வேணாம்னு தடுத்தாங்க. எனக்கு ஆதரவா ஒரு 100 பேரு போய் பாருன்னு சொன்னாங்க,'' என தெரிவித்தார்.

ரேகா உள்ளே போவதற்கு முன் அவருடைய மகள் அனுஷா மற்றும் நடிகை ஊர்வசி இருவரும் அவருக்கு காணொளி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா காரணமாக பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss Tamil 4: Rio, Sanam, Rekha and Bala enter house

People looking for online information on Bigg Boss 4 will find this news story useful.